• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை டவுன்ஹால் மைக்கேல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக கொரோனா நிவாரணம்

July 10, 2021 தண்டோரா குழு

கொரோனா கால நேரத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மேடை கலைஞர்களுக்கு கோவை டவுன்ஹால் மைக்கேல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த விதிக்கப்பட்ட முழு ஊரடங்கால் அனைத்து சேவைகளும் முடங்கின.பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் ,விழாக்கள் மேடை நிகழ்ச்சிகள் இல்லாததால் மேடை கலைஞர்களும் போதிய வருமானமில்லாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு காலகட்டங்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து மேடை கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினர். கொரோனா கால விதிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதில், பள்ளியின் முதல்வர் பங்குதந்தை ஆண்ட்ரூ கலந்து கொண்டு மேடை கலைஞர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை மைக்கேல்ஸ் பள்ளியின் முன்னால் மாணவர்கள் அக்கீம், ஜெரால்ட், ஸ்டீபன், வர்கீஸ், செய்யது அபுதாகிர், முரளி, தியாகு, கிஷோர், மிராஜ் உட்பட பல்வேறு மாணவர்கள் செய்திருந்தனர்.

மேலும் படிக்க