• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஜி.எம் நகரில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்களால் பரபரப்பு

July 22, 2020 தண்டோரா குழு

கோவையில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு ஏறபட்டது. குடிநீர் திறந்துவிடுவதாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

கோவையில் உக்கடம் GM நகர் பகுதிகளில் சரியான முறையில் குடிநீர் வராத காரணத்தால் அப்பகுதி மக்கள் குடங்களுடன் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் மற்றும் போலிசார் சமரச பேச்சு வார்த்தை நடத்த முயன்றனர். உக்கடம் பகுதியில் அடந்த 15 நாட்களாக சரியான முறையில் குடிநீர் விடுவதுமில்லை எனவும் இது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு வைத்தனர்.

மேலும் பகல் நேரத்தில் தண்ணீரை விடுவதற்கு பதிலாக நள்ளிரவில் தண்ணீர் திறந்து விடுவதாகவும், குறிப்பிட்ட நில நிமிடங்கள் மட்டும் விடுவதால் குடிநீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதையடுத்து, உக்கடம் சாலையில் 30க்கு மேற்பட்டவர்கள் குடங்களுடன் குடிநீர் விடக்கோரி போராட்டம் நடத்தினர். அதன்பின்னர் உக்கடம் போலிசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். குடிநீர் விடுவதாக அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை அடுத்து வீடு திரும்பினர்.

மேலும் படிக்க