July 12, 2019 தண்டோரா குழு
கோவை செல்வபுரம் பாண்டுரங்க சுவாமி திருக்கோவிலில் வருடம் ஒரு முறை நடைபெறும் சுவாமியை பாத தொட்டும் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கோவை செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ பாண்டுரங்க சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை சுவாமியின் பாதம் தொட்டு வணங்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் ஆசார ஏகாதேசியான இன்று பாண்டுரங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனை அபிஷேகங்களும் நடைபெற்றன. இதனை தொடர்ந்து பாண்டுரங்க சுவாமியின் பாதம் தொட்டு வணங்கி பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.