• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை செல்வபுரத்தில் வாகன மோசடியில் கைதானவர் மீது குண்டர் சட்டம்

July 22, 2020 தண்டோரா குழு

கோவை செல்வபுரம், வடக்கு ஹவுசிங் யூனிட் ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்தவர் ஹக்கீம். இவர் வாகன மோசடியில் ஈடுபட்டார்.வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்ட வாகனங்களை உரிமையாளரிடம் பெற்று அதனை வேறு நபர்களுக்கு கொடுத்து வந்தார். அந்த வாகன உரிமையாளர் வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டி செலுத்துவதில்லை.மேலும் வாகனத்தை வங்கி பறிமுதல் செய்ய வந்தால் உரிமையாளரிடம் இருப்பதில்லை. ஹக்கீம் அதனை வேறு நபர்களுக்கு கமிஷன் அடிப்படையிலோ அல்லது குறைந்த விலையிலோ விற்றுவிடுவார். இதுபோன்று நீண்டநாட்களாக மோசடி நடைபெற்றதால் இதுகுறித்து ஏராளமானவர்கள் செல்வபுரம் மற்றும் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹக்கீமை கைது செய்தனர்.செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருதாசலம் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 15 கார்கள், ஒரு ஆட்டோ, 30 இருசக்கர வாகனங்கள் உள்பட 46 வாகனங்களை பறிமுதல் செய்தனர். கைதான ஹக்கீம் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், ஏராளமான வாகன மோசடியில் ஈடுபட்டதால் ஹக்கீமை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹக்கீமிடம் இதற்கான நகலை போலீசார் நேற்று வழங்கினார்கள்.

மேலும் படிக்க