• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிறையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 12 பேர் தேர்ச்சி !

May 8, 2023 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று 12 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் பெற்று முதலிடத்தையும்,திருப்பூர் 97.79 சதவீதம் பெற்று 2ஆம் இடத்தையும், பெரம்பலூர் 97.59 சதவீதம் பெற்று 3 ஆம் இடத்தையும் கோயமுத்தூர் 97.57 சதவீதம் பெற்று நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

கோவை மத்திய சிறையில் 1500 க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டணை சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் இந்த ஆண்டு 12 சிறைவாசிகள் 12 ம் வகுப்பு தேர்வினை எழுதினர்.இதில் தேர்வு எழுதிய சிறைவாசிகள் 12 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில்
எஸ்.கார்த்திகேயன் என்ற சிறைவாசி 481 மதிப்பெண்கள் பெற்றார்.சுபாஷ் சந்திரபோஷ் என்ற சிறைவாசி 461 மதிப்பெண்களும்,சந்தீப் என்ற சிறைவாசி 460 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

இதே போல் கோவை மாநகராட்சியில் உள்ள 33 பள்ளிகளில் ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அது போல் கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 158 மாற்றுத் திறனாளிகளில் 149 பேரும் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 21 பார்வௌயற்றோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க