April 4, 2019 தண்டோரா குழு
கோவை பன்னிமடையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை மருத்துவமனையில் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சந்தோஷ் குமாருக்கு இன்று கோவை அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஆண்மைப் பரிசோதனை செய்வதற்காக சந்தோஷ் குமாரை கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சட்ட மருத்துவத்துறை (பிரேத கிடங்கு) அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். இங்கு சுமார் ஒரு மணி நேரம் வரை வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனை முடிந்து போலீஸ் ஜீப்பில் ஏறும்போது சுற்றியிருந்த பொதுமக்கள் சந்தோஷ் குமாரை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து போலீசார் சந்தோஷ்குமாரை பாதுகாப்பாக ஜீப்பில் ஏற்றி வேகவேகமாக அழைத்துச் சென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.