• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கொரோனோ வைரஸை தடுக்கும் பார்முலா 2 நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

March 19, 2020 தண்டோரா குழு

மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் பீடம் மற்றும் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் அமைப்பான எஸ்ஆர்எம் யூ இணைந்து கோவை ரயில் நிலையத்தில் கொரோனோ வைரஸை தடுக்கும் பார்முலா 2 நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சித்தர் சிவ சண்முகசுந்தரம் பாபுஜி சுவாமிகள் தலைமை வகித்தார். தொடர்ந்து ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

இது குறித்து சித்தர் சிவ சண்முகசுந்தரம் பாபுஜி சாமிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது,

உலகெங்கும் பயமுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.நமது உடம்பில் போதுமான அளவு எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த விதமான விஷ காய்ச்சலும் நம்மை அண்டாது இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக கோவை ரயில் நிலையத்தில் இன்று பத்தாயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறோம். தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேருக்கு இந்த மாதத்திற்குள் நிலவேம்பு கசாயம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி நடப்பதை அறிந்த ரயில் பயணிகள் ஏராளமானோர் நீலவேம்பு கசாயத்தை வாங்கி பருகி சென்றனர்.

மேலும் படிக்க