• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் ரூ5 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

June 25, 2021 தண்டோரா குழு

கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் ரூ5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை இஎஸ்ஐ கொரோனா வார்டுகளுக்கு வழங்க டீன் ரவீந்திரனிடம் வழங்கப்பட்டது.

கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவமனைகளுக்கு சமூக தொண்டு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.இதேபோல், கோவை கொங்கு நண்பர்கள் சார்பில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை வார்டிற்கு, ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் 20 வீல் சேர், 20 ஸ்டெச்சர் ஆகியவற்றை, இஎஸ்ஐ மருத்துவமனையின் டீன் ரவீந்திரனிடம், கொங்கு நண்பர்கள் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார், செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் கேபி.அழகேசன், இணைச்செயலாளர் லோகநாதன், நிர்வாக்குழு உறுப்பினர்கள் நடராஜன், நக்கீரன் ஆகியோர் வழங்கினர்.

இந்த அமைப்பு சார்பில் கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையின் முன்கள பணியாளர்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு மேலாக உணவு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க