• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குற்றாலம் சுற்றுலா வேன் ஓட்டுநர் யானை தாக்கி காயம்

July 13, 2021 தண்டோரா குழு

வைதேகி நீர்வீழ்ச்சி அருகே நேற்று இரவு வந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவை குற்றாலம் சுற்றுலா வேன் ஓட்டுநர் விஜயகுமாரும் அங்கு சென்றதாக தெரிகிறது.

அப்போது வைதேகி நீர்வீழ்ச்சி அருகே உள்ள நுழைவு வாயில் அருகே விஜயகுமார் நின்ற போது, மற்றொரு காட்டு யானை திடிரென வந்து
விஜயகுமாரை தந்தத்தால் தாக்கி, தூக்கி வீசியது.

இதில் இரு கால்கள், முதுகு பகுதிகளில் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகே இருந்த வனத்துறையினர் மற்றும் பழங்குடி கிராம மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க