• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குற்றாலம் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி

June 20, 2018 தண்டோரா குழு

கோவையில் கடந்த 9 நாட்களாக மழையின் காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றலாம் இன்று மழை குறைந்ததன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கோவையில் உள்ள கோவை குற்றாலம் அருவியில் மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால்,கடந்த 9 நாட்களாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் நேற்று மழை குறைந்ததால் சராசரி அளவுக்கு தண்ணீர் வருவதன் காரணமாக அருவியில் இன்று அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர்.இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும்,கோவை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்ததால் இதுவரை 110 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.அதிகபட்சமாக வால்பாறையில் உள்ள சின்கோனா பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும்,குறைந்த பட்சமாக பொள்ளாச்சியில் 8 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.சிறுவாணி அணையில் இன்னும் ஐந்து அடி நிரம்பினால் அணையின் முழு கொள்ளளவை எட்டி விடும்.

மேலும் படிக்க