November 18, 2021
தண்டோரா குழு
தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த தீபக் தாமோர், ஊழல் தடுப்பு பிரிவு இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையராக இருந்த பிரதிப் குமார், கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்,நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன், சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக நியமனம். புளியந்தோப்பு துணை ஆணையராக இருந்த ராஜேஷ்கண்ணா, வேலூர் மாவட்ட எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.