• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை காந்தி பார்க் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

March 21, 2018 தண்டோரா குழு

மதுரையில் போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து கோவை  காந்தி பார்க் முன்பு இன்று(மார்ச் 21)இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.

மதுரையில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும் தமிழகத்தில் சட்ட விரோத ஜெபக்கூடங்கள் நடைபெறுவதை தடை செய்யக்கோரியும் கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காந்தி பார்க் முன்பு நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தின்போது இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும்,போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.மேலும்,அனுமதியின்றி நடைபெறும் ஜெபக்கூடங்களை உடனடியாக தடை செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை முழங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க