May 27, 2021
தண்டோரா குழு
கோவையில் தொடர்ச்சியாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கோவை மாநகரின் பல பகுதிகளில் கொரானா பேரிடர் உதவி மையங்களை துவங்கி நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல சேவைகளை செய்து வருகிறது.அதைத்தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்துடன் இணைந்து கொரோணா பேரிடர் உதவி மையத்தை , காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இன்று துவக்கப்பட்டது.
இந்நிகழ்வினை கோவை பாராளுமன்ற உறுப்பினர் ,P.R. நடராஜன் துவக்கி வைத்தார். பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மாவட்ட தலைவர் M. I. அப்துல் ஹக்கீம், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன்,பாப்புலர் ஃப்ரண்ட் மண்டல தலைவர் A. அன்வர் உசேன், SDPI மாவட்ட தலைவர் K. ராஜா உசேன், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர்கள், உபைதுர் ரஹ்மான் , முஜீபூர் ரஹ்மான் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உதவி எண்கள்.
99 525 79 108.,
994 07 66 109