• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கதிர் மில்ஸ் வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

May 26, 2021 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சாரதா டெர்ரி,கதிரி மில்ஸ் இணைந்து கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கதிர் மில்ஸ் வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்ட கோவிட் கேர் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்திள்ள நிலையில் கோவையில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நோயால் பாதிக்கப்படுவோர் போதிய படுக்கை வசதி இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சாரதா டெர்ரி,கதிரி மில்ஸ் இணைந்து கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கதிர் மில்ஸ் வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்ட கவி கோவிட் கேர் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன்,கோவை மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியண் ,மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி மற்றும் சாரதா டெர்ரி மற்றும் குழுமங்களின் தலைமை மேலாண் இயக்குனர் கண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் ஹரிஹரன், சஞ்சனா விஜயகுமார், விக்ரம், கிருத்திகா விக்ரம், நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க