March 20, 2020
கொரானா வைரஸ் எதிரொலியாக பெரிய ஜவுளி கடைகள் நகைக் கடைகளையும் இன்று முதல் 31ஆம் தேதி வரை மூடுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரானா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள் தியேட்டர்கள் மூடப்படும் என்று சமீபத்தில் முதலமைச்சர் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தற்போது அடுத்தகட்ட தடுப்பு நடவடிக்கை குறித்து அவர் வெளியிட்டு இருக்கிறார்.தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் ஏற்கனவே வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது மக்கள் அதிகம் செல்லக் கூடிய ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி கொண்ட பெரிய ஜவுளிக் கடைகள், பெரிய நகைக் கடைகள், பல்வகை பொருட்கள் விற்பனை செய்யும் மிகப்பெரிய கடைகள் போன்றவற்றில் அதிக மக்கள் கூட்டம் கூடுவதால் இன்று முதல் மூடப்படும் எனினும் நகைக் கடை போன்றவற்றில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆர்டரின் படி பொருட்களை பெற்று செல்ல மட்டும் ஒரு தனி வழி பயன்படுத்தலாம். பொருட்கள் விற்கும் கடைகள் பல்பொருள் அங்காடிகள் காய்கறிகள் மருந்துகள் மற்றும் உணவுகள் ஆகியவை வழக்கம் போல் செயல்படும். அதனடிப்படையில் கோவை ஒப்பணக்கார வீதி யில் உள்ள பிரபல ஜவுளி கடைகள் நகைக் கடைகள் மூடப்பட்டன இதனால் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.