• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஏல மையத்தில் டீ தூள் விலை கிலோவுக்கு 3 ரூபாய் 17 காசு அதிகரிப்பு

January 17, 2022 தண்டோரா குழு

கோவை ஏல மையத்தில், டீ தூள் விலை கிலோவுக்கு 3 ரூபாய் 17 காசு அதிகரித்தது.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வாரந்தோறும் டீ தூள் ஏலம் விடப்படுகிறது.இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான 2-வது ஏலத்தில் 43 பேர் கலந்து கொண்டனர்.இந்த ஏலம் மின்னனு முறையில் நடந்தது.இந்த ஏலத்திற்கு 2 லட்சத்து 41 ஆயிரத்து 430 கிலோ டீ தூள் வந்தது.

அதில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 151 கிலோ ஏலம் போனது. ஒரு கிலோ டீ தூள் விலை 120 ரூபாய் 16 காசு. ஆனால் கடந்த ஏலத்தில் ஒரு கிலோ 116 ரூபாய் 99 காசுக்கு ஏலம் போனது. இதன் மூலம் கிலோவுக்கு 3 ரூபாய் 17 காசு விலை அதிகரித்துள்ளது. மொத்தம் ரூ.1 கோடியே 98 லட்சத்து 44 ஆயிரத்து 544-க்கு டீ தூள் ஏலம் போனது. இதேபோல் இலை ரக டீ தூள் 2 லட்சத்து 28 ஆயிரத்து 413 கிலோ ஏலத்துக்கு வந்தது. அதில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 651 கிலோ ஏலம் போனது.

ஒரு கிலோ இலை ரக டீ தூளின் விலை 104 ரூபாய் 56 காசு ஆகும். இது கடந்த வாரம் 107 ரூபாய் 98 காசு ஆக இருந்தது. இதனால் இந்த வாரம் ஒரு கிலோவுக்கு 3 ரூபாய் 42 காசு விலை குறைந்தது. இதன்படி விற்பனையான இலை ரக தேயிலையின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 66 லட்சத்து 93 ஆயிரத்து 108 ஆகும். இந்த ஏலத்தில் 42 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க