• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம்

March 16, 2018

குளிர்பதன கிடங்கை தனியாருக்கு வாடகை விட்டதை கண்டித்து கோவை உழவர் சந்தையில் உள்ள விவசாயிகள் இன்று(மார்ச் 16)போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையை அடுத்த சிங்காநல்லூர் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் பயன்படுத்துவதற்காக குளிர்பதன கிடங்கு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குளிர்பதன கிடங்கை உழவர்களுக்கு பயன்படுத்தாமல் தனியாருக்கு வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து நிர்வாகிகளிடம் பல முறை புகார் அளித்து உள்ளனர்.ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இன்று திடீரென விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் வியாபாரம் பாதிக்கப்பட்டது.பின்னர் அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குளிர்பதன கிடங்கை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு விடுவதாக கூறியதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் படிக்க