• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம்

March 16, 2018

குளிர்பதன கிடங்கை தனியாருக்கு வாடகை விட்டதை கண்டித்து கோவை உழவர் சந்தையில் உள்ள விவசாயிகள் இன்று(மார்ச் 16)போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையை அடுத்த சிங்காநல்லூர் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் பயன்படுத்துவதற்காக குளிர்பதன கிடங்கு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குளிர்பதன கிடங்கை உழவர்களுக்கு பயன்படுத்தாமல் தனியாருக்கு வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து நிர்வாகிகளிடம் பல முறை புகார் அளித்து உள்ளனர்.ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இன்று திடீரென விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் வியாபாரம் பாதிக்கப்பட்டது.பின்னர் அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குளிர்பதன கிடங்கை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு விடுவதாக கூறியதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் படிக்க