• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கூடுதலாக 2 மணி நேரம் கடை திறக்க அனுமதி

April 25, 2020 தண்டோரா குழு

நாளை முதல் முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகளில்,இன்று மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும்,நாளை முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பொது மக்களின் வசதிக்காக, இன்று மட்டும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும். பொதுமக்கள் பொருட்களை வாங்கச் செல்லும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க