November 25, 2020 தண்டோரா குழு
கோவை உக்கடம் வாலாங்குளத்தில் , உடல் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலத்தை உக்கடம் போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை உக்கடம் வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் குளத்தில் ஒரு பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பதாக உக்கடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மீட்கப்பட்டவர் சுமார் 40 – 50 வயது மதிக்கத்தக்க ஆண் என்றும், அவர் இறந்து சில நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.