• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மீண்டும் படர துவங்கிய ஆகாயத்தாமரை

July 21, 2021 தண்டோரா குழு

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குளக்கரையில் பூங்காக்கள், மிதிவண்டி பாதை, குளத்தில் மிதக்கும் நடைபாதை, படகு சவாரி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஆக்கிரமித்திருந்த ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு குளம் திறக்கப்பட்டது.இந்நிலையில், குளத்தில் மீண்டும் ஆகாயத்தாமரை அதிகளவில் படர தொடங்கியுள்ளது.மிதக்கும் நடைபாதை, படகு சவாரி செய்வதற்கான கட்டமைப்பு ஆகியவற்றை ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளது.

அவற்றை அகற்றாவிட்டால் நாளடைவில் அப்பகுதி முழுதும் மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததற்றதாக மாறிவிடும் எனக்கூறும் சூழலியல் ஆர்வலர்கள், குளங்களில் நேரடியாக கழிவுகள் கலப்பதாலே இதுபோன்று ஆகாயத்தாமரை படருவதாகவும், அதற்கு தீர்வுக்காணாமல் குளத்தில் உயிர் சூழல் பாதிக்கப்படும் வகையில் பொழுதுபோக்கு அமசங்களாக மாற்றுவது ஏற்புடையது இல்லை என்கின்றனர்.

ஏற்கனவே, மாநகராட்சி கீழ் உள்ள குளங்களில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி மற்றும் நொய்யல் புனரமைப்பு திட்டத்தால் குளங்களின் பல்லுயிர் சூழல் பாதிக்கப்படுவதுடன், குளங்களில் நீர் தேக்க பரப்பளவு குறைந்துள்ளதாகவும், அதனால் திட்டத்தை மாற்றியமைக்கவும் கோவையை சேர்ந்த 11 சூழலியல் அமைப்புகள் ஆதரங்கை முதல்வருக்கு கடிதம் மூலம் மனு அனுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க