• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உக்கடம் பழைய இரும்பு மார்க்கெட் 45 நாட்களுக்கு பின் இன்று திறப்பு

May 8, 2020 தண்டோரா குழு

கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட கோவை பழைய இரும்புக் மார்க்கெட் 45 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டது, வாடகை, மின் கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை உக்கடம் பகுதியில் மாநகாராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான மெளலானா முகமது அலி இரும்பு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் சுமார் 350 கடைகள் உள்ளது. கோவை தொழில் நகரம் என்பதால் எப்போது வாடிக்கையாளர்களால் நிறைந்து காணப்படும், பழைய இரும்பு மார்க்கெட், கொரோனா தடுப்பு ஊரடங்கால் கடந்த 45 நாட்களாக மூடப்பட்டுள்ளது.ஏற்கனவே மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டுவந்ததால் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில்,தொடர்ந்து 45 நாட்கள் கடைகள் மூடப்பட்டதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும்,இதனை கருத்தில் கொண்டும் இரண்டு மாதங்களுக்கு வாடகை மற்றும் மின் கட்டணத்தை செலுத்த மாநகராட்சி நிர்வாகம் விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க