• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உக்கடம் குளக்கரையில் மக்களை கவரும் ஐ லவ் கோவை செல்பி கார்னர் !

June 5, 2020 தண்டோரா குழு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் மீண்டும் வேகப்படுத்தி உள்ளன. கோவை உக்கடம் குளக்கரையில் செல்பி கார்னர் அமைக்கும் பணி நடக்கிறது. இரவில் ஒளிரும் வகையில் வண்ண விளக்குகள் அமைக்கப்படுகின்றன.இரு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்தப் பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஒன்பது குலங்கள் மேம்படுத்த படுகின்றன.இதில் உக்கடம் பெரியகுளம் ஒரு பகுதி மற்றும் வாலாங்குளம் ஒரு பகுதியில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த மார்ச் மாதமே பணியை முடித்து கோடை விடுமுறைக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க மாநகராட்சி திட்டமிட்டு இருந்தது.ஊரடங்கால் கட்டுமானப் பணிகள் முடங்கின தற்போது தளர்வு வழங்கப் பட்டுள்ளதால் இரு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன குளக்கரையில் ஐலவ்யு கோவை என ஆங்கில எழுத்துக்களால் செல்பி கார்னர் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இரவில் ஒளிரும் வகையில் வண்ண விளக்குகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

கோவை மாநகராட்சி அதிகாரி கூறும்போது,

கோவையில் உள்ள ஒன்பது குலங்கள் ரூபாய் 3 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.முதற்கட்டமாக உக்கடம் பெரியகுளத்தில் 1.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன. நடைபாதை,நடைப் பயிற்சிக்கான வழி சைக்கிள் பாதை குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் படகு சவாரி திறந்தவெளி அரங்கம் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கான தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இன்னும் இரு மாதங்களுக்குள் பணியை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

மேலும் படிக்க