• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உக்கடத்தில் வாலிபர் வெட்டி கொலை

March 17, 2017 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த இளம் இரும்பு வியாபாரியை மர்ம நபர்கள் சரமாரியாகக் கத்தியால் குத்தியும், வெட்டியும் படுகொலை செய்தனர்.

உக்கடம் அடுத்த பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ஹமீது என்பவரது மகன் பரூக் (31). உக்கடம் பழைய இரும்பு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் பரூக்கிற்கு 3 ஆம் வகுப்பில் படிக்கும் மகள் மற்றும் 6ம் வகுப்பில் பயிலும் மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வியாயழன் இரவு பணி முடித்து வீட்டில் இருந்த அவருக்கு சுமார் இரவு 11.45 மணியளவில் செல்போன் மூலம் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், “தொழில் ரீதியாகப் பேச வேண்டும். உக்கடம் பகுதி மாநகராட்சி கழிவுநீர்ப் பண்ணைக்கு அருகே வரவும்” என்று கூறியுள்ளார்.

அதையடுத்து இரு சக்கர வாகனத்தில் அங்கு சென்ற பரூக்கை அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் திடீரென்று தாக்கினர். அங்கிருந்து தப்ப முயன்ற பரூக்கை தங்களிடமிருந்த கத்தியைக் கொண்டு சரமாரியாகக் குத்தியும் வெட்டியும் நிலைகுலையச் செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

பரூக்கின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அங்கு விரைந்தனர். ஆனால், பரூக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த உக்கடம் போலீசார் பரூக்கின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று இருசக்கர வாகனத்திலும் ஒரு ஆட்டோவிலும் தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பரூக் சில மாதங்களுக்கு முன் ஆத்துப்பாலம் சுங்கச் சாவடித் தாக்குதல் தொடர்பாக பரூக் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையை அடுத்து ஏற்பட்ட கலவரத்தின் விளைவாக ஆத்துப் பாலம் சுங்கச் சாவடியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், அவரது கொலைக்கும் அந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை சம்பவத்தைத் தொடர்ந்து எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க