• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உக்கடத்தில் அரசு வங்கி பெண் ஊழியருக்கு கொரோனா உறுதி

June 28, 2020 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பெண் வங்கி ஊழியருக்கு கொரோனா உறுதியான நிலையில், சில தினங்களுக்கு அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

கோவை உக்கடம் மேம்பாலம் கட்டும்பணி நடந்து வருவதால், சி.எம்.சி காலணி பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் இரண்டு இடங்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பட்டா வழங்கும் விழா கடந்த நான்கு நாட்களுக்கு முன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுணன், மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் ஜடாவத், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடிசை மாற்று வாரிய ஊழியர் ஒருவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி பெண் ஊழியர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து பெண் ஊழியர் ஆம்புலென்ஸ் மூலம் கோவை இ.எஸ் ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர் குடியிருந்த பகுதி சீல் வைக்கப்பட்டது. மேலும் அவரது உறவினர்கள் பகுதி மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணிகளை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

மேலும் படிக்க