• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடத்தில் அரசு வங்கி பெண் ஊழியருக்கு கொரோனா உறுதி

June 28, 2020 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பெண் வங்கி ஊழியருக்கு கொரோனா உறுதியான நிலையில், சில தினங்களுக்கு அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

கோவை உக்கடம் மேம்பாலம் கட்டும்பணி நடந்து வருவதால், சி.எம்.சி காலணி பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் இரண்டு இடங்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பட்டா வழங்கும் விழா கடந்த நான்கு நாட்களுக்கு முன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுணன், மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் ஜடாவத், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடிசை மாற்று வாரிய ஊழியர் ஒருவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி பெண் ஊழியர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து பெண் ஊழியர் ஆம்புலென்ஸ் மூலம் கோவை இ.எஸ் ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர் குடியிருந்த பகுதி சீல் வைக்கப்பட்டது. மேலும் அவரது உறவினர்கள் பகுதி மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணிகளை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

மேலும் படிக்க