January 5, 2021 தண்டோரா குழு
கோவை ஈச்சனாரி அருகே பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலத்த காயத்துடன் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் போது தனியார் பேருந்து ஈச்சனாரி பகுதியில் எதிரே வந்த காரில் நே௫க்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இதில் காரில் வந்த அக்கா,தம்பி அஜய்(24) மற்றும் காஞ்சனா தேவி(34) ஆகிய இ௫வர் படுகாயம் அடைந்தனர்.தொடர்ந்து உடனடியாக அவர்கள் அ௫கே உள்ள தனியார் ம௫த்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கோவை பொள்ளச்சி சாலை ஈச்சனாரி மேம்பாலத்திக் விபத்து நடைபெற்ற நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.