July 2, 2020 தண்டோரா குழு
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் இன்று உயிரிழந்தார்.
கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கோவையில் கொரோனாவால் 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 222 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 337 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதற்கிடையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கோவை மட்டுமின்றி நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நோய் தொற்று உறுதி செய்யப்படுபவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நீலகிரி மாவட்டம் கீரின்பீல்டு பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவர் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த 8 நாட்களாக
பெற்று வந்தார்.
இந்நிலையில்,இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.மேலும் இவருக்கு சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகளும் இருந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.