• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இருகூரில் மதுபானக் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

May 25, 2017 தண்டோரா குழு

கோவை இருகூர் அத்தப்பக்கவுண்டன்புதூர் இடையே செயல்படும் மதுபானக் கடையை மூடக்கோரி இருநூறுக்கும் மேற்பட்டோர் இரண்டு மணிநேரமாக நேற்று(மே – 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் ஆணைய அடுத்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை ஓரம் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை ஊருக்குள்ளும், கோவில் மற்றும் பள்ளி கல்லூரிக்கு அருகிலும் திறக்க அரசு முயற்சிப்பதை எதிர்த்து பொதுமக்கள் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.

இதனிடையே கோவை இருகூர் அத்தப்பக்கவுண்டன்புதூரில் உள்ள கடை எண் 2266 மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபானக் கடைக்கு எதிராக கண்டன கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் மதுபானக்கடைக்கு அருகேயுள்ள திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு குடித்து விட்டு வருபவர்கள் பெண்களுக்கு தொந்தரவு செய்வதாகவும்,இதனால் பள்ளி , கல்லூரி ,மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி மூன்று முறை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க