• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு!

July 8, 2020 தண்டோரா குழு

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கோவையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 800ஐ கடந்தது. இந்நிலையில், கோவை வீரபாண்டி பிரிவு வி.கே.வி.நகரை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதையடுத்து, அவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 2ம் தேதி இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்த மகன், மகள் உள்பட 4 பேருக்கும் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், முதியவரின் உடல்நிலை நேற்று முதலே மோசமானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இவரது உடல் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி அடக்கம் செய்ய தயார் படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க