• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் புத்தாண்டில் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் பரிசளிப்பு

January 1, 2019 தண்டோரா குழு

கோவை ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக புத்தாண்டு தினத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் பரிசளிக்கப்ட்டது.

புத்தாண்டு தினத்தன்று முதலில் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளுக்கு ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது. ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் தலைவர் மீனா ஜெயக்குமார் தலைமையில் இன்று காலை கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளுக்கு தங்கம் மோதிரங்களை வழங்கினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எங்களது அறக்கட்டளை சார்பில் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு, பெண் குழந்தைகள், முதியோர்கள் ஆகியோருக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறோம். திண்டுக்கல்லில் கஜா புயலால் பாதிக்கப் பட்டிருந்த பாச்சலூர் என்ற மலை கிராமத்தில் முதல் முதலாக நிவாரண உதவிகளை செய்தோம். மேலும், அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் பல்வேறு உதவிகளை அளித்து வருகிறோம். உடல் ஊனமுற்றவர்களுக்கான உபகரணங்களை வழங்கி வருகிறோம். பல்வேறு நலத்திட்டங்களை இந்த ஆண்டு செய்ய இருக்கிறோம் என்றார்.

நிகழ்ச்சியில் ஆலம் ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஐஸ்வரியா பிரியா சந்திரன், செல்வி, கீர்த்தி ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க