• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆட்சியர் சமீரன் தலைமையில் துறை அலுவலர்கள், பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு !

September 17, 2021 தண்டோரா குழு

தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்தத்தை தொடர்ந்து அவரது 143 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தலைமையில் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்
சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

தமிழக அரசு பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களிலும், அரசு அலுவலகளிலும் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் சமூக நீதி உறுதி மொழி ஏற்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சமூக நீதி நாள் உறுதி ஏற்பு வாசகங்களை வாசிக்க, கூடியிருந்த நுற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்து கொள்வேன் என்றும் மானுட பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும் எனவும் சமூக நீதியே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த சமூக நீதி நாளில் உறுதி ஏற்கின்றேன் என அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் படிக்க