• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அருகே விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்

May 17, 2019 தண்டோரா குழு

கோவை சுல்தான் பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவு பகுதியில் சாலை விபத்தில் சிக்கியவரை அமைச்சர் அவர்கள் மீட்டு உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

கோவை சுல்தான்பேட்டை செஞ்சேரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் அமைச்சர் எஸ் பி வேலுமணி இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்பு கோவை சுல்தான் பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவு பகுதியில் வரும் பொழுது சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் சிக்கினார் அப்போது அங்கு வந்த அமைச்சர் எஸ் பி வேலுமணி உடனடியாக அவரது பின்னால் வந்த வாகனத்தில் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் மேலும் அமைச்சர் அவர்கள் சாலை விபத்தில் யார் சிக்கினாலும் அதை பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்தி அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் மருத்துவமனையில் நிர்வாகிகளை அழைத்துப் பேசி உடனடியாக முதலுதவி செய்யுங்கள் என மருத்துவர்களிடம் பேசினார் மேலும் சாலை விபத்தில் சிக்கிய நபரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர் மேலும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க