• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு

April 23, 2019 தண்டோரா குழு

கோவை அருகே மின்சாரம் தாக்கி 40வயது ஆண் யானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு பாக்குத்தோப்பிற்குள் 40 வயதுமிக்க ஆண் யானை ஒன்று அங்கிருந்த பாக்குமரங்களை சேதப்படுத்தியது. அப்போது, யானை செத்தப்படுத்தியதில்உடைந்த பாக்குமரம் ஒன்று மின்கம்பி மீது விழுந்ததில் மின்வயர் அறுந்து கீழே விழுந்திருந்தது.

இதையரியாமல் யானை இரவு முழுவதும் பாக்குத்தோட்டத்திற்குள் சுற்றித் திரிந்துள்ளது. இந்நிலையில்,யானை கீழே இருந்த மின்வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பின்னர், இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க