• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 35 பேர் அனுமதி

December 5, 2019 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 35 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் டெங்கு வைரஸ் காய்ச்சல்கள் தாக்கம் அதிக அளவு உள்ளது.இந்த காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும் காய்ச்சலின் தாக்கம் குறைந்தபாடில்லை தற்போது கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 35 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை டாக்டர்கள் தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் மேலும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 164 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க