• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 199 பேருக்கு ரீட்ரோ பல்பார் சிகிச்சை

November 1, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 199 பேருக்கு ரீட்ரோ பல்பார் என்னும் கண்ணுக்கு கீழ் ஊசி செலுத்துதல் சிகிச்சை அளிக்கப்பட்டதன் மூலம் அவர்கள் கண்பார்வை இழப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:

கோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை பாதிப்பிற்கு இதுவரை 416 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது 14 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 8 பேருக்கு மூளைவரை சென்ற பூஞ்சை பாதிப்பு அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

அதேபோல் பூஞ்சையால் 9 நோயாளிகளுக்கு கண்ணம் பகுதியில் அரிக்கப்பட்ட அழுகிய திசுக்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு கண்பார்வை இழப்பை தவிர்க்கும் வகையில் ரீட்ரோ பல்பார் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு ஆம்போடெரிசின் -பி என்ற ஊசி செலுத்தப்படுகிறது. அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் 199 பேருக்கு ரீட்ரோ பல்பார் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் ஒரு ஊசியின் விலை ரூ.7 ஆயிரம். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தேவையான ஊசிகள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க