• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 199 பேருக்கு ரீட்ரோ பல்பார் சிகிச்சை

November 1, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 199 பேருக்கு ரீட்ரோ பல்பார் என்னும் கண்ணுக்கு கீழ் ஊசி செலுத்துதல் சிகிச்சை அளிக்கப்பட்டதன் மூலம் அவர்கள் கண்பார்வை இழப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:

கோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை பாதிப்பிற்கு இதுவரை 416 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது 14 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 8 பேருக்கு மூளைவரை சென்ற பூஞ்சை பாதிப்பு அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

அதேபோல் பூஞ்சையால் 9 நோயாளிகளுக்கு கண்ணம் பகுதியில் அரிக்கப்பட்ட அழுகிய திசுக்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு கண்பார்வை இழப்பை தவிர்க்கும் வகையில் ரீட்ரோ பல்பார் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு ஆம்போடெரிசின் -பி என்ற ஊசி செலுத்தப்படுகிறது. அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் 199 பேருக்கு ரீட்ரோ பல்பார் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் ஒரு ஊசியின் விலை ரூ.7 ஆயிரம். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தேவையான ஊசிகள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க