• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அவதி

May 10, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனை முதல் நுழைவாயிலில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.அங்கு கடந்த சில சில தினங்களாகவே சாக்கடை நீர் வெளியேறி வருவதாக குற்றச்சாட்டுகளை எழுந்த நிலையில் அதனை மருத்துவமனை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சாக்கடை நீர் அதிக அளவு வெளியேறியதால் அங்கு நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் நோயாளிகளும் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.மக்களின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தற்காலிகமாக நடை பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

எனினும் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் அங்கு துர்நாற்றம் வீசுவதாகவும் கொசுக்கள் அதிகரிப்பதாகவும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனை உடனடியாக சரி செய்து தரும்படியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க