• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை சுற்றி சினிமா படப்பிடிப்பு தளங்கள் அதிகமாக உருவாகி வருகிறது – நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்

October 6, 2020 தண்டோரா குழு

கோவையை சுற்றி அழகான சினிமா படப்பிடிப்பு தளங்கள் அதிகமாக உருவாகி வருவதாகவும், தனது மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் கோவையிலேயே நடைபெற்றதாக பிரபல திரைப்பட நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் அறிமுக விழா டொயோட்டா வளாகத்தில் நடைபெற்றது. இதற்கான விழாவில் பிரபல திரைப்பட நடிகரும் இளம் தொழில் முனைவோரும் ஆன மாதம்பட்டி ரங்கராஜ் புதிய காரை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்,

சிறிய வயதில் இருந்தே தமக்கு கார்கள் என்றால் மிகவும் ஆர்வம் எனவும்,தற்போது அறிமுகம் ஆகி உள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரில் கார் பிரியர்களுக்கான அனைத்து அம்சங்களும் நவீன வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் தற்போது மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளதாக கூறிய அவர் தனது படங்கள் அனைத்தையும் கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே பிரபல சினிமா ஸ்டுடியோக்கள் கோவையில் இருந்த நிலையில் தற்போது கோவையில் அதிக சினிமா படப்பிடிப்புகள் நடைபெற வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க