• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 97 ஆம் ஆண்டு பேட்ச் போலீசார் இணைந்து நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கல்

June 16, 2021 தண்டோரா குழு

கோவையில் 97 ஆம் ஆண்டு பேட்ச் போலீசார் இணைந்து நோயாளிகளுக்கு வழங்கிய பழங்கள் தொகுப்பை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் வழங்கினார்.

தமிழக காவல் துறையில் கடந்த 97 ஆம் ஆண்டு பேட்ச் காவலர்கள் இணைந்து தங்களது வெள்ளி விழா ஆண்டான 25 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடினர்.இந்நிலையில் இதனை நினைவு கூறும் விதமாக,கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ஏதாவது செய்ய முடிவெடுத்தனர்.

அதன் படி 97 ஆம் ஆண்டு பேட்ச் போலீசார் இணைந்து நோயாளிகளுக்கு ஆப்பிள்,ஆரஞ்சு போன்ற சத்தான பழங்கள் தொகுப்பை வழங்க முடிவு செய்தனர். இதற்கான நிகழ்வில் கோவையில் பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வரும் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசு மருத்துவமனை பிரசவ வார்டு மற்றும் நோயாளிகள் என சுமார் 500 பேருக்கு பழங்கள் தொகுப்பை வழங்கினார்.

மேலும் படிக்க