• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 861 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கேமிரா பொருத்தும் பணிகள் தீவிரம்

April 3, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 861 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கேமிராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு,கவுண்டம்பாளையம், சூலூர், வால்பாறை, கினத்துகடவு,சிங்காநல்லூர், பொள்ளாச்சி என 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளில் 2464 மையங்களில் 4427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 146 மையங்களில் 861 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,‘‘பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமிரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளன.இன்னும் ஒரிரு நாட்களில் இந்த பணி நிறைவடையும்’’ என்றனர்.

மேலும் படிக்க