• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 861 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கேமிரா பொருத்தும் பணிகள் தீவிரம்

April 3, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 861 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கேமிராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு,கவுண்டம்பாளையம், சூலூர், வால்பாறை, கினத்துகடவு,சிங்காநல்லூர், பொள்ளாச்சி என 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளில் 2464 மையங்களில் 4427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 146 மையங்களில் 861 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,‘‘பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமிரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளன.இன்னும் ஒரிரு நாட்களில் இந்த பணி நிறைவடையும்’’ என்றனர்.

மேலும் படிக்க