• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 70 கிலோ லட்டு படைத்து பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

September 16, 2020 தண்டோரா குழு

கோவையில் பிரதமரின் 70 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 70 கிலோ வடிவலான லட்டை கோவிலில் வைத்து வழிப்பட்டு பாஜகவினர் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

கோவையில் திருச்சி சாலை அமைந்துள்ள ரெயின்போ காலனி பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் பிரதமர் நரேந்திரமோடி எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். செப்டம்பர் 17 நாளை பிரதமர் மோடி அவருடைய எழுபதாவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இந்தநிலையில் அவர் பல்லாண்டு வாழவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து செயல்படும் சிவன் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் இறைவனை வேண்டி வேண்டுதல் வைத்தனர்.

மேலும் பிரதமர் மோடி அவருடைய 70வது பிறந்த நாள் என்பதால் 70 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட லட்டை கோவிலில் வைத்து வழிபட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக அளித்தனர். மேலும் பிரதமர் பூரண நலமுடன் இருக்க 70 கிலோ வடிவிலான பிரம்மாண்ட லட்டை பாஜகவினர் செய்து பிரதமரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வைத்து குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க