• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 60 சதவீதம் வரை கொரோனா தொற்று குறைந்துள்ளது – அமைச்சர் கே.என்.நேரு

June 7, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

2 முறை முதலமைச்சர் கோவைக்கு வந்து கொரொனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த நிலையில் தற்போது 60 சதவீதம் வரை தொற்று குறைந்துள்ளது. கருப்பு பூஞ்சை
பெரிய மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் அரசின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனைகள் அதிக்கட்டணம் வசூல் செய்வது கட்டுப்பாட்டில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார்.

எல்லா மருத்துவமனைகளில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப் படும். தனிமைபடுத்துதல் முகாம்களில் இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சூயஸ் திட்டம் ரத்து செய்வது அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவு. இது குறித்து முதல்வர் முடிவு செய்வார். தடுப்பூசி வந்தவுடன் கிராமங்கள் தோறும் ஊசி போடுவது குறித்து ஆலோசிக்கப் பட்டுள்ளது. கொரொனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசின் கவனம் முழுமையாக இருக்கின்றது என்றார்.

மேலும் படிக்க