• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 6 வயது சிறுவன் மர்ம மான முறையில் உயிரிழப்பு – பெற்றோரிடம் விசாரணை

April 19, 2020 தண்டோரா குழு

கோவையில் 6 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் திவ்யா.இவருக்கு 6 வயதில் அபிஷேக் என்ற மகனும்,3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். முதல் கணவரான அருண்னை பிரிந்து திவ்யா, கார் ஒட்டுநரான ராஜதுரை என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அபிஷேக்கிற்கு உடல் நிலை சரியில்லை என ஆம்புலன்ஸ்க்கு அழைத்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அபிஷேக்கின் உடல் முழுக்க காயங்கள் இருந்த நிலையில் பரிசோதனை செய்து பார்த்த போது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அபிஷேக்கின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக சாய்பாபா காலணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறும்பு செய்த சிறுவனை அடித்ததினால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ராஜதுரை மற்றும் திவ்யா ஆகியோரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க