December 26, 2019
கோவை பன்னிமடையில், 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு நபருக்கும் தொடர்பு உள்ளது. அவரை கண்டுபிடிக்க வேண்டும் எனக்கூறி, சிறுமியின் தாயார் கோவை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
கோவை துடியலுார் அருகே பன்னிமடையில், கடந்த மார்ச்.,25 ல்,வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கை கோவை மகிளா நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்தால் வழக்கின் தீர்ப்பு நாளை (27.12.2019) வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது டிஎன்ஏ சோதனையில் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, தனது மகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி சிறுமியின் தாயார் கோவை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இவ்வழக்கில் சந்தோஷ்குமார் மட்டுமே வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்கை முடித்த நிலையில், சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.