• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் மற்றும் கண்காணிப்பாளரை கண்டித்து ஆசிரியர் பயிற்றுனர்கள் போராட்டம்

March 27, 2018 தண்டோரா குழு

கோவையில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு எதிராக தொடர்ந்து விரோத போக்கை கடைப்பிடித்து வரும், மாவட்ட உதவி திட்ட அலுவலர் மற்றும் கண்காணிப்பாளரை கண்டித்து ஆசிரியர் பயிற்றுனர்கள் போராட்டத்தில் இன்று(மார்ச் 27)ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பெல்ராஜ் மற்றும் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோர் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு எதிராக தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விரோத போக்கை கடைப்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட தொடக்க அலுவலகத்தில்,ஆசிரியர் பயிற்றுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்,ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு தேர்வு நிலை ஆணை வழங்காமல் இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிப்பு செய்வதாகவும், பெண் ஆசிரியர்களுக்கு மகப்பேறு காலத்தில் விடுப்பு எடுக்க அனுமதிப்பதில்லை எனவும் புகார் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

பெண் ஆசிரியர் பயிற்றுனர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், எனவே உடனடியாக அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் போராட்டத்தின் போது தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் முடிவடையும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க