• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் மீது வாகனங்கள் ஏறி உறுக்குலைந்து CCTV காட்சிகள்

September 7, 2021 தண்டோரா குழு

கோவை சின்னியம்பாளையம் சோதனை சாவடி அருகே அதிகாலையில் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் மீது வாகனங்கள் ஏறி உறுக்குலைந்து அடையாளம் தெரியாத நிலையில் உடலை போலிசார் கைப்பற்றினர்.

விபத்தில் உயிரிழந்தவரின் உடல் சிதைந்த நிலையில் இருந்ததால் யார் என்று அடையாளம் காணமுடியவில்லை,போலிசார் விபத்து நடந்த இடத்தில் அருகில் உள்ள சி.சி.டி.யை ஆய்வு செய்ததில் அதிகாலையில் சின்னியம் பாளையம் அருகில் கோவை நோக்கி வந்த ஒரு ஸ்கார்பியோ வாகனத்தில் இருந்து ஒருவரை வெளியே சாலையில் வீசும் காட்சி பதிவாகியிருந்தது.

போலிசார் அந்த சி.சி.டி.வி.காட்சிகளை வைத்து தற்பொழுது இரண்டு தனிபடைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். வாகனத்தில் இருந்து வீசும்போது கொலைசெய்து வெளியே வீசினார்களா.அல்லது சாலையில் வேகமாக செல்கும்போது வெளியே தள்ளிவிட்டார்களா, இறந்தவர் யார், எதர்க்காக, யார் செய்தார்கள் என்று தனிபடை போலிசார் விசாரனையை தீவிரபடுத்தியுள்ளனர்.

முதற்கட்டமாக விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள கணியூர் சுங்கச்சாவடியில் அதிகாலை நேரத்தில் அந்தவழியாக சென்ற வாகனங்கள் குறித்து தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கொலையாக இருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்த பெண்ணின் உடலில் மேலாடை மட்டும் ( ஜாக்கட் ) இருந்ததால் விபத்தில் இறக்க வாய்ப்பில்லை என போலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் படிக்க