• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 4.5 டன் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் – அரசு பஸ் கண்டக்டர் உட்பட 3 பேர் கைது

April 29, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் முருகவேல் . இவர் நேற்று இரவு போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஒரு பள்ளிவாசல் முன் உள்ள திறந்த வெளியில் கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த 4.5 டன் ரேஷன் அரிசி, ஒரு டெம்போ வேன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆனைமலை காந்தி நகரைச் சேர்ந்த ரபிக் (39) பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த முகமது ரபிக் (29) ஆனைமலையை சேர்ந்த பக்கிபுல்லா ( 44 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் பக்கி புல்லா அரசு போக்குவரத்து கழக உக்கடம் கிளையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். முகமது ரபிக் இறைச்சிக் கடை வைத்துள்ளார்.ரபிக் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவர்களிடமிருந்து 3 பைக்குகளும் ,4.5 டன் ரேஷன் அரிசி ,ஒரு டெம்போ வேன் பறிமுதல் செய்யப்பட்டது .இவர்கள் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க