March 15, 2018
தண்டோரா குழு
கோவையில் குனியமுத்தூர் மண்டலம் சார்பில் இலவச இரத்த பரிசோதனை முகாம் இடையர்பாளையம் மைதானத்தில் இன்று(மார்ச் 15)நடைபெற்றது.
பா.ஜ.கவின் 93 வது டிவிஷன் குனியமுத்தூர் மண்டல் சார்பில் நடைபெற்ற இலவச இரத்த பரிசோதனை முகாமில் இரத்தத்தில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவற்றின் அளவீடுகள் மற்றும் இரத்த அழுத்தம், உயரம், எடை மற்றும் கல்லீரல் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனை முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.இந்த பகுதியில் ஆரம்பித்து கோவை மாநகரம் முழுவதும் படிப்படியாக இந்த முகாம் நடத்தப்படும் என்று கோவை மாநகர மாவட்ட மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் கலைச்செல்வி மூர்த்தி தெரிவித்தார்.மேலும், இந்த நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி தலைவி கீதா வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.