• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 300 தொழிலாளர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்கல்

November 27, 2021 தண்டோரா குழு

300 தொழிலாளர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை கோவை தொழிலாளர் நலத்துறை துணை கமிஷனர் வழங்கினார்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் (டாக்ட்) சங்கம் மற்றும் தொழிலாளர் நலத் துறையும் இணைந்து குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நிரந்தரத் தொழிலாளர் அடையாள அட்டைக்கான பதிவு செய்யும் முகாம் இடையர்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமுக்கு டாக்ட் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் தலைமை வகித்தார்.கோவை தொழிலாளர் நலத் துறை துணை கமிஷனர் செல்லப்பா அடையாள அட்டைகளை தொழிலாளர்களுக்கு வழங்கினார்.இந்த முகாமில், இஎஸ்ஐ பதிவு இல்லாத, குறுந்தொழில் முனைவோர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர் என முதற்கட்டமாக 300 பேருக்கு நிரந்தர அடையாள அட்டை பதிவு செய்து உடனுக்குடன் அளிக்கப்பட்டது.

நிகழ்வில் தொழிலாளர் நலத் துறை ஆய்வாளர்கள், டாக்ட் சங்க நிர்வாகிகள் பிரதாப் சேகர், லீலாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க