• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 300 தொழிலாளர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்கல்

November 27, 2021 தண்டோரா குழு

300 தொழிலாளர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை கோவை தொழிலாளர் நலத்துறை துணை கமிஷனர் வழங்கினார்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் (டாக்ட்) சங்கம் மற்றும் தொழிலாளர் நலத் துறையும் இணைந்து குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நிரந்தரத் தொழிலாளர் அடையாள அட்டைக்கான பதிவு செய்யும் முகாம் இடையர்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமுக்கு டாக்ட் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் தலைமை வகித்தார்.கோவை தொழிலாளர் நலத் துறை துணை கமிஷனர் செல்லப்பா அடையாள அட்டைகளை தொழிலாளர்களுக்கு வழங்கினார்.இந்த முகாமில், இஎஸ்ஐ பதிவு இல்லாத, குறுந்தொழில் முனைவோர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர் என முதற்கட்டமாக 300 பேருக்கு நிரந்தர அடையாள அட்டை பதிவு செய்து உடனுக்குடன் அளிக்கப்பட்டது.

நிகழ்வில் தொழிலாளர் நலத் துறை ஆய்வாளர்கள், டாக்ட் சங்க நிர்வாகிகள் பிரதாப் சேகர், லீலாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க