• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 23ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்; 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

October 21, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் வரும் 23ம் தேதி 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் இதுவரை 5 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தம் 5 லட்சத்து 51 ஆயிரத்து 62 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவின் தாக்கம் தற்சமயம் குறைந்து வருகிறது. இந்நிலையில் வரும் 23ம் தேதி சனிக்கிழமை 6-வது தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இம்முகாம் மூலம் இரண்டு இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை முதல் தவணை செலுத்திக் கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணைக்காக காத்திருப்போரும் தற்கள் வீட்டிற்கு அருகில் உள்ள இந்த முகாம்களில் தடுப்பூசி பெற்று பயனடையலாம். இதன்மூலம் கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு கொரோனாவின் தாக்கம் முழுவதும் குறைய வாய்ப்பாக அமையும்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் 1104, மாநகராட்சி பகுதிகளில் 325 என மொத்தம் 1429 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமிற்காக தன்னார்வலர்கள், தனியார் மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க