• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 228 ஊராட்சிகளில் 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன- அதிகாரி தகவல்

May 27, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 228 ஊராட்சிகளில் 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவும் விகிதம் அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் தொற்று பாதித்தவர்களில் கோவை மாநகராட்சி பகுதியில் 72 சதவீதம் இருந்தனர். மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக இந்த தொற்று சதவீதம் தற்போது 54 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து உள்ளது.

அதே நேரத்தில் சூலூர் பகுதியில் தொற்று 11 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதுதவிர துடியலூர், பொள்ளாச்சி,அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகரித்து உள்ளது மாவட்டத்தில் மிக குறைந்த அளவாக வால்பாறையில் தொற்று பாதிப்பு 1 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. மொத்த பாதிப்பில் தற்போது ஊரக பகுதி 50 சதவீதத்தை நெருங்கி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகள், 37 பேரூராட்சிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார்.மேலும் ஊராட்சிக்கு ஒன்று வீதம் கொரோனா கண்காணிப்பு குழு அமைத்தும் கலெக்டர் உத்தரவிட்டார். இந்த குழுவில் செவிலியர், ஊராட்சி தலைவர், செயலாளர், போலீசார் உள்ளிட்டோர் உள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 கொரோனா சிகிச்சை மையங்கள் வீதம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு மொத்தம் 700 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த சிகிச்சை மையங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இங்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டும் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் சிகிச்சை பெறும் நோயாளிகள் யாருக்காவது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டால் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வைத்திருக்க உத்தரவிட்டு உள்ளோம். தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள முடியாதவர்கள் இந்த மையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க